ஆண்டாள் கோயிலில் பக்தர்களுக்கு பட்டு வஸ்திரம் வழங்கும் விழா

திருவில்லிபுத்தூர், பிப். 4: ஒவ்வொரு ஆண்டும் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் பட்டு வஸ்திரம் பக்தர்களுக்கு வழங்கும் விழா நடைபெறும். நேற்றும் ஆண்டாள் கோயிலில் பட்டு வஸ்திரங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்று மருத்துவர்கள் வழங்குவதற்காக கலெக்டர் கண்ணன், சப்-கலெக்டர் தினேஷ்குமார் ஆண்டாள் கோவிலுக்கு வருகை தந்தனர். அவர்களை கோயில் நிர்வாக அதிகாரி இளங்கோவன் தலைமையில் அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் சுமார் 350க்கும் மேற்பட்ட ஆண், பெண் பக்தர்களுக்கு பட்டு வஸ்திரங்களை அவர்கள் வழங்கினர். உணவுப் பொருட்களும் வழங்கப்பட்டன. இவ்விழாவில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன் மற்றும் கோயில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: