திருவாரூர் நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலையின் 87வது பொது பேரவை கூட்டம்

திருவாரூர், பிப். 13: திருவாரூர் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் 87வது பொது பேரவை கூட்டம் 11ம்தேதி எஸ்பிஆர் ரெசிடான்சி வடக்கு வீதியில் நடைபெற்றது. கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் க.சித்ரா தலைமையில் நடைபெற்ற இந்த பொது பேரவை கூட்டத்தில், கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர், சரக துணைப் பதிவாளர் திருவாரூர், துணை பதிவாளர்(பொவிதி) திட்டம் திருவாரூர், நுகர்வோர் அமைப்பினர், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாட்சியர்கள், சங்க செயலாளர்கள் மற்றும் அனைத்து கூட்டுறவுத்துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

 

Related Stories: