சிவகங்கை/காரைக்குடி, பிப்.4: சிவகங்கை மாவட்டம் முழுவதும் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. சிவகங்கை நகர் திமுக சார்பில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் துரைஆனந்த் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் மணிமுத்து, மாநில பொதுக்குழு உறுப்பினர் பிடிஆர்.முத்து முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர்(வடக்கு) முத்துராமலிங்கம், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் பவானிகணேசன், இளைஞரணி அமைப்பாளர் அயூப்கான், வட்ட செயலாளர்கள் கண்மணி, ராஜபாண்டியன், சேகர், பாண்டியராஜன், நகர் துணை செயலாளர் சரவணன், மாவட்ட ஆதி திராவிடர் நல அணி சிங்கமுத்து, தகவல் தொழில்நுட்ப அணி காசிசிவராமன், சதீஸ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். திருப்புவனத்தில் ஒன்றிய திமுக சார்பில் மாவட்ட துணைச் செயலாளர் சேங்கைமாறன் தலைமையில் நினைவு தின ஊர்வலம் நடந்தது. பின்னர் அண்ணாவின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய செயலாளர்கள் வசந்திசேங்கைமாறன், கடம்பசாமி, நகர் செயலாளர் நாகூர்கனி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.