காவேரிப்பட்டணம், பிப்.4: காவேரிப்பட்டணம் அடுத்த பாளேகுளியில் எருதுவிடும் விழா நடத்த எதிர்ப்பு தெரிவித்து, ஊர்மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காவேரிப்பட்டணம் அடுத்த பாளேகுளியில், எருது விடும் விழா ஆண்டுதோறும் நடத்துவது வழக்கம். இந்த ஆண்டும் எருது விடும் விழா நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், ஊரில் உள்ள சிலர் தன்னிச்சையாக செயல்பட்டு எருதுவிடும் விழாவை நடத்துவதாகவும், ஊர்மக்களை கலந்தாலோசிக்கவில்லை என எதிர்ப்பு எழுந்தது. ஊர்மக்களை கலந்தாலோசித்த பின் வேறு தேதியில் எருது விடும் திருவிழா நடத்த வேண்டும் எனக்கூறி, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.