முஸ்லிம் பெண்கள் தங்கள் கணவரின் சம்மதம் இன்றி விவாகரத்து பெறும் ‘குலா’ முறை.. ஏப்ரல் 22ல் விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்!

டெல்லி : முஸ்லிம் பெண்கள் தங்கள் கணவரின் சம்மதம் இன்றி விவாகரத்து பெறும் ‘குலா’ (Khula) முறை குறித்து, ஏப்ரல் 22ம் தேதி விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம். குலா முறையில் விவாகரத்து பெற நீதிமன்ற அனுமதி அவசியமா மற்றும் அதன் பிறகு ஜீவனாம்சம் கோர முடியுமா போன்ற முக்கிய கேள்விகள் குறித்து உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளது. குலா முறையை அங்கீகரித்து கேரள உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்துத் தொடரப்பட்ட மேல்முறையீட்டைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்திற்கு உதவ மூத்த வழக்கறிஞர் ஷோயப் ஆலம் நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: