திருப்பூர், பிப். 3: திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட முதலிபாளையம் சிட்கோ வெள்ளக்கரடை சேர்ந்தவர் தண்டபாணி.இவரது மனைவி பாக்யலட்சுமி (50). சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் பழனிசெல்வம் (46). இவர் பனியன் நிறுவனத்தில் டிரைவாக பணிபுரிந்து வந்தார். பாக்யலட்சுமிக்கும், பழனிசெல்வத்துக்கும் ஏற்கனவே அறிமுகம் இருந்ததால் இருவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் இருந்தது. இந்த நிலையில் பாக்யலட்சுமி கடனாக வாங்கிய பணத்தை பழனிசெல்வத்திற்கு கொடுக்க வேண்டி இருப்பதாக தெரிகிறது. நேற்று முன்தினம் மதிய உணவு சாப்பிட்டுவிட்டு பாக்யலட்சுமி வீட்டிலிருந்து பனியன் நிறுவனம் சென்றார். சிட்கோ ரவுண்டானா அருகே வந்த பழனிசெல்வம் தனக்கு கொடுக்க வேண்டிய பணம் குறித்து பாக்யலட்சுமியிடம் கேட்டுள்ளார்.