ஓமலூர், பிப்.2: ஓமலூர் அருகே திமிரிக்கோட்டை பகுதியில், தாபா ஓட்டல் செயல்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பால், கடந்த ஓராண்டாக மூடிக் கிடந்த ஓட்டல், தற்போது தான் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு, அங்கு பாலிகடை பகுதியைச் சேர்ந்த 5க்கும் மேற்பட்ட நபர்கள் சென்றுள்ளனர். ஓட்டலை திறந்து உணவு வழங்குமாறு மிரட்டியுள்ளனர். உடனே, அங்கிருந்த ஊழியரும் உணவு தயார் செய்து கொடுத்துள்ளார். அப்போது, கையோடு வங்கி வந்திருந்த மதுவை அவர்கள் குடிக்க தொடங்கினர். அதற்கு ஊழியர் எதிர்ப்பு தெரிவித்து, “இங்கே மது குடிக்க அனுமதி இல்லை. அனைவரும் எழுந்து செல்லுங்கள்” என்று கூறியுள்ளார்.