நெல்லை டவுனில் காமாட்சியம்மன் கோயில் வருஷாபிஷேகம்

நெல்லை, பிப். 2: நெல்லை டவுன் காட்சிமண்டபம் கம்பாநதி காமாட்சி அம்மன் கோயில் வருஷாபிஷேக விழா நடந்தது. இதில் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். பிரசித்திப் பெற்ற காந்திமதி அம்பாள் சமேத நெல்லையப்பர் கோயிலுடன் இணைந்த காமாட்சியம்மன் உடனுறை மகாலிங்க சுவாமி கோயில் 9வது ஆண்டு வருஷாபிஷேக விழா, நேற்று நடந்தது. விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்கிய விழாவில் தேவதா அனுக்ஞை, எஜமான சங்கல்பம், மகா பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து விமான கும்பாபிஷேகம், மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமி, அம்பாளுக்கு அலங்காரம், தீபாராதனையும், மகேஸ்வர பூஜையும் நடந்தது. இதில் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மாலையில் சிறப்பு அலங்காரம், சகஸ்ரநாம பாராயணம், தீபாராதனையும், பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது. மாலையில் சிறப்பு விளக்குபூஜை நடந்தது.

Related Stories: