கூட்டணி அல்ல… தனித்தே எதிரிகளை தோற்கடிப்பேன்: சசிகலா வாய்ஸ்

மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா மரியாதை செலுத்தினார். பின்னர் நிருபர்களிடம் அவர் பேசியதாவது: ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை ஒரு சாதாரண அறிக்கை தான். தமிழ்நாட்டிற்காக எதுவுமே இந்த பட்ஜெட்டில இல்ல. ஒவ்வொரு கட்சியும் அவங்களுக்கு எது சரின்னு படுதோ அந்ததந்த கட்சியோட கூட்டணி வச்சிக்குவாங்க. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில ஆட்சி நடக்கணும். அதான் என்னோட திட்டம். அதனால சட்டமன்ற தேர்தல்ல தனித்து போட்டியிட்டு எதிரிகளையும், துரோகிகளையும் தோற்கடிப்போம் என்றார். ஏற்கனவே, ‘‘கண்ணுக்கு எட்டிய தூரம் வரைக்கும் எங்களுக்கு எதிரியே இல்லைனு திமுக சொல்லுது. நான் ஒருத்தி இருக்கிறதயே மறந்துட்டாங்க..’’ என்று சசிகலா பேசியது படு கிண்டலுக்கு உள்ளானது. இப்போ தனித்துப்போட்டி என்று அடுத்த நகைச்சுவையை கொடுத்திருக்கிறார். ‘‘இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு சின்னம்மா..’’ என்று நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளுகிறார்கள்.

Related Stories: