சுசீந்திரம் கோயிலில் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு அன்னதானம்

சுசீந்திரம்.பிப்.4: சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் நேற்று மதியம் பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு சிறப்பு அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. அன்னதான நிகழ்ச்சியில் கோயில்களின் இணை ஆணையர் ஜான்சிராணி, திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் பாபு, சுசீந்திரம் பேரூர் செயலாளர் சுதை சுந்தர், சுசீந்திரம் 9 வது வார்டு திமுக கிளைச் செயலாளர் அழகு தாமோதரன், திமுக ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் தாமரை பிரசாத் வினோத், கோயில் கண்காணிப்பாளர் ஆனந்த், மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: