கே.வி.குப்பம் அடுத்த மகாதேவமலையில்

கே.வி.குப்பம், பிப்.2: ேக.வி.குப்பம் அடுத்த மகாதேவமலையில் மகானந்த சித்தரிடம் ரஜினி அண்ணன் சத்யநாராயணா ஆசி பெற்றார். வேலூர் மாவட்டம், காட்பாடியில் நடந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் பங்கேற்க நேற்று முன்தினம் இரவு நடிகர் ரஜினியின் அண்ணன் சத்யநாராயணா வந்தார். பின்னர், அவர் கே.வி.குப்பம் அருகே உள்ள மகாதேவமலைக்கு சென்று மகாதேவ சுவாமியை தரிசனம் செய்தார். தொடர்ந்து, மகானந்த சித்தரிடம் ஆசி பெற்றார். மேலும், ரஜினியின் உடல்நலம் குறித்து மகானந்த சித்தர் கேட்டறிந்து, ரஜினி பூரண நலம் பெற அருளாசி வழங்கினார். அப்போது, ரஜினி மக்கள் மன்ற கே.வி.குப்பம் ஒன்றிய செயலாளர் பாஸ்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர். தரிசனம் முடிந்து வெளியில் வந்த அவரிடம் நிருபர்கள் பேட்டி எடுக்க முயன்றனர். ஆனால் மறுத்துவிட்டு அவர் புறப்பட்டு சென்றுவிட்டார்.

Related Stories: