அந்தியூர், பிப். 2: நீங்கள் என்னை ஒரு நடிகராக பார்த்து விட்டீர்கள் என அந்தியூரில் ச.ம.க. தலைவர் சரத்குமார் பேசினார். ஈரோடு மாவட்டம் அந்தியூரில் சமத்துவ மக்கள் கட்சியின் சட்டமன்ற தேர்தல் குறித்து கொங்கு வடக்கு மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் சத்குருநாதன் தலைமையில் நேற்று நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ச.ம.க. தலைவர் சரத்குமார் பேசியதாவது: நாங்கள் அ.தி.மு.க. வுடன் தொடர்ந்து பயணித்து கொண்டு இருக்கிறோம். ஒரு இயக்கத்தை துவங்கியவுடன் அந்த இயக்கத்தின் தலைவர் முதலமைச்சர் ஆக வேண்டும் என அந்த கட்சியினர் நினைப்பது தவறு இல்லை. மகளிர், இளைஞர்கள் அதிகமாக வந்தால்தான் நாம் அரசியலில் வெற்றி பெற முடியும். பிரசாரத்திற்கு கூட்டங்கள் வரும், அங்கே வந்தவர்கள் உங்களுக்குதான் ஓட்டு போடுவார்களா? என்று நினைத்தால் அது தவறாக போய்விடும்.