சென்னை: தைலாபுரம் தோட்டத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு நேர்காணல் நடைெபறும் என்று பாமக நிறுவனர், தலைவர் ராமதாஸ் அறிவித்துள்ளார். காலை 10 மணி முதல் தைலாபுரம் தோட்டத்தில் நேர்காணல் நடைபெறவுள்ளது. விருப்பமனு அளித்தவர்களுடன் மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் கலந்துகொள்ள வேண்டும். 31ம் தேதி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர்,
தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கும், 1ம் தேதி விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, கரூர், புதுச்சேரி மாவட்டங்களுக்கும், 2ம் தேதி சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டகளுக்கும் நேர்காணல் நடைபெறுகிறது.
