ஈரோடு, ஜன.30: மானியத்துடன் கூடிய சூரிய சக்தி மின்வேலி அமைக்கும் திட்டத்திற்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் கதிரவன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சூரிய மின்வேலி அமைப்பானது சூரிய ஒளி மின்தகடுகள் மூலம் கிடைக்கும் மின்சாரத்தால் இயங்க கூடியது. சூரிய ஒளி மின்வேலி அமைப்பதனால் மின் வேலியில் செலுத்தப்படும் உயா் மின் அழுத்தத்துடன் கூடிய குறுகிய உந்து விசை மின் அதிர்ச்சியினால் யானை, காட்டுபன்றி போன்ற விலங்குகளால் விவசாயிகள் பயிரிடும் பயிர்களுக்கு ஏற்படும் சேதாரம் தவிர்க்கப்படுகிறது.