பெண்ணை தாக்கிய பெயிண்டர் கைது

துறையூர், ஜன.29: துறையூர் அருகே பெண்ணைத் தாக்கிய பெயிண்டரை போலீசார் கைது செய்தனர். துறையூர் அருகே சொரத்தூர் இந்திரா நகரை சேர்ந்தவர் சின்னையன் மகன் பிரசன்னா(30), பெயிண்டர். இவரது வீட்டருகே வசிப்பவர் சுரேஷ் என்பவரின் மனைவி பாரதி(35). இவர் நேற்று வீட்டிலிருந்து வெளியே வரும் போது பிரசன்னா வம்பு செய்ததாகவும், அப்போது ஏற்பட்ட வாய் தகராறில் பாரதியை அவர் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக பாரதி கொடுத்த புகாரின் பேரில் துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரசன்னாவை கைது செய்தனர்.

Related Stories: