துறையூரில் வழிப்பறி திருடன் குண்டாசில் கைது

துறையூர், ஜன.29: துறையூர் விநாயகர் தெருவை சேர்ந்தவர் தமிழ்செல்வன் மகன் சோனி(எ) இளவரசன்(21). இவர் கடந்த ஜன.3ம் தேதி அப்பகுதியிலுள்ள பள்ளிக்கு செல்லும் சாலையில் மயானம் அருகே புதுச்செட்டித் தெருவை சேர்ந்த சரத்குமார் என்பவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.30ஐ பறித்துச் சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில் துறையூர் போலீசார் வழக்குப்பதிந்து இளவரசனை கைது செய்து சிறையிலடைத்தனர். இந்நிலையில் இளவரசன் மீது துறையூர், பெரம்பலூரில் பல வழக்குகள் உள்ளது. இவரை குண்டர் சட்டத்தில் அடைக்க திருச்சி எஸ்பி (பொ) செந்தில்குமார் பரிந்துரை செய்தார். இதனையடுத்து திருச்சி கலெக்டர் சிவராசு உத்தரவின் பேரில் இளவரசன் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories: