நாகர்கோவில், ஜன.29: நாகர்கோவில் பிஎஸ்என்எல் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் ஏற்கனவே லேன்ட் லைன் இணைப்புகளைப் பெற்று தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ள நாகர்கோவில் தொலைபேசி நிலைய பகுதியை சேர்ந்த வாடிக்கையாளர்கள் மீண்டும் பி.எஸ்.என்.எல் உடன் இணைந்து இந்த சலுகையை பயன்படுத்தி கொள்ளும் வகையில் சிறப்பு மறு இணைப்பு மேளா நடத்தப்படுகிறது. நாகர்கோவில் கோர்ட் ரோட்டில் உள்ள வாடிக்கையாளர் சேவை மையத்தில் நாளை (30ம் தேதி) சனிக்கிழமை காலை 10.30 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த முகாம் நடைபெறுகிறது.