சின்னமனூர், ஜன.29: சின்னமனூர் சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் மானாவாரியாகவும், கிணற்று பாசனத்தின் வாயிலாக வெள்ளைச் சோளம் விதைக்கப்பட்டுள்ளது. ஒரு ஏக்கருக்கு 25 ஆயிரம் வரை விவசாயிகள் செலவு செய்து வளர்த்துள்ளனர். அறுவடை நெருங்கும் நிலையில் விவசாயிகள் கவலையில் உள்ளனர். ஏற்கனவே மேற்கு மலை தொடர்ச்சி அடிவாரத்தில் தேனிமாவட்டம் இருப்பதால் ஜனவரி மாதத்தில் மழையும் பெய்து வருவதால், குளிர் கடுமையாக இருக்கிறது. இந்த குளிரால் வெள்ளைச் சோளம் தாக்குப் பிடிக்காமல் அறுவடை நெருங்கிய நேரத்தில் கருகி வருகிறது.