மதுரை, ஜன. 27: மதுரை மாநகர் வடக்கு மாவட்ட மாணவர் அணி சார்பில் முனிச்சாலையில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது. மாணவர் அணி அமைப்பாளர் வழக்கறிஞர் முகேஷ்சர்மா தலைமை வகித்தார். மாநகர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் பொன்.முத்துராமலிங்கம் வரவேற்றார். தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்பி பேசுகையில், ‘நம் மொழிக்கு, பண்பாட்டுக்கு, தமிழ் இனத்துக்கு, மாநில உரிமைகளுக்கு எதிராக இருக்கிற பாஜ அரசை எதிர்த்து அழிக்க, தமிழகத்தில் நடக்கிற அதிமுக அரசை ஒழித்து நல்லாட்சி அமைந்திட தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக வேண்டும்’ என்றார்.