காங். சார்பில் குடியரசு தின விழா

கோவை,   ஜன. 27: கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் 72-வது குடியரசு தின   விழா கோவை ரயில் நிலையம் ரோட்டில் உள்ள காமராஜர் பவனில் நேற்று நடந்தது. காங்கிரஸ் கட்சியின் மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் தலைமை  தாங்கி, தேசிய கொடி ஏற்றி வைத்தார். மாநகர் மாவட்ட தலைவர் வக்கீல்  கருப்புசாமி இனிப்பு வழங்கினார். விழாவில், முன்னாள் மேயர் காலனி  வெங்கடாசலம், நிர்வாகிகள்  வீனஸ் மணி, திருமூர்த்தி, கருணாகரன், பாஸ்கர்,  ஜெயபால், கோவை போஸ், கே.ஏ.கருப்புசாமி, பாசமலர் சண்முகம், துளசிராஜ்,  சாய்ஸ் சாதிக், லூயிஸ், திலகவதி, குமரேசன், அனீஸ், கணேசன், ரங்கநாதன்,  சவுந்தர்ராஜ், சின்னு ராமகிருஷ்ணன், ராம்நகர் சீனிவாசன், காமராஜ்துல்லா  உள்பட பலர் பங்ேகற்றனர்.

Related Stories: