சாத்தான்குளம், ஜன.26: பெரியதாழை யோவான், ஸ்தேவான், புனித காணிக்கை அன்னை ஆலய திருவிழா நேற்று முன்தினம் இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. சாத்தான்குளம் அருகே உள்ள பெரியதாழை யோவான், ஸ்தேவான், புனித காணிக்கை அன்னை ஆலய திருவிழா கடந்த 24ம் தேதி இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிப்.2ம் தேதி வரை 10 நாள்கள் விழா நடக்கிறது. 24ம் தேதி மாலை 6.15 மணிக்கு தூத்துக்குடி ஆயர் இல்ல அருள்பணியாளர் ரூபர்ட் அருள்வளன் தலைமையில் ஜெபமாலை, கொடியேற்றம், நவநாள் திருப்பலி, நற்கருணைஆசீர் நடந்தது. கால்டுவேல் காலனி பங்குதந்தை வில்லியம்சந்தானம் மறையுரை வழங்கினார். இதில் திரளானோர் கலந்து கொண்டனர். 2ம் நாளான 25ம் தேதி முதல் 8ம் நாளான 31ம் தேதி வரை தினமும் காலை நவநாள் திருப்பலி, ஜெபமாலை, நற்கருணைஆசீர், மறையுரை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதில் பங்குதந்தைகள் வைகுண்டம் கிஷோர், ஜீவாநகர் சகேஷ், பொத்தகாலன்விளை வெனி இளங்குமரன், தூத்துக்குடி அம்புரோஸ், செட்டிவிளை ததேயுராஜன், தோமையார்புரம் பிரதீபன், கீழமுடிமன் வினிஸ்டன் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.