ஈரோடு, ஜன. 24: ஈரோடு மாவட்டத்தில் இன்று (24ம் தேதி) 13 மையங்களில் ஊரக திறனாய்வு தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வினை 1,338 மாணவ-மாணவிகள் எழுத உள்ளனர். தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் கிராமப்புறத்தில் படிக்கும் 9ம் வகுப்பு மாணவர்களுக்காக ஊரக திறனாய்வு தேர்வினை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இத்தேர்வில் பங்கேற்க தகுதி பெற்றால், மாணவ-மாணவிகள் பிளஸ் 2 முடிக்கும் வரை ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகையாக ரூ.1,000 தமிழக அரசால் வழங்கப்படும். அதன்படி, நடப்பாண்டுக்கான ஊரக திறனாய்வு தேர்வு இன்று (24ம் தேதி) நடைபெற உள்ளது.