கல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு

திருமயம், ஜன. 24: கல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை எம்எல்ஏ ரகுபதி திறந்து வைத்தார். புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள கீழாநிலைக்கோட்டை அய்யாக்கண்ணு அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. எம்எல்ஏ ரகுபதி பங்கேற்று மாணவர்களுக்கு அரசின் இலவச சைக்கிள் வழங்கினார். இதைதொடர்ந்து கல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை எம்எல்ஏ ரகுபதி திறந்து வைத்தார். பின்னர் அந்த பள்ளி மாணவர்களுக்கு அரசின் இலவச சைக்கிளை வழங்கினார். நிகழ்ச்சியில் அரிமளம் ஒன்றியக்குழு தலைவர் மேகலா முத்து, ஒன்றிய கவுன்சிலர் கல்லூர் மல்லிகா அண்ணாமலை, தகவல் தொழில்நுட்ப அணி இளையராஜா, காசி பொற்செல்வன், ஊராட்சி தலைவர் கண்ணன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

Related Stories: