அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொடங்கியது..!!

சென்னை: அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொடங்கியுள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கும் வகையில் தேர்தல் பணிகள் குறித்து இன்றைய தினம் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை செய்ய உள்ளார். குறிப்பாக அமைப்பு ரீதியாக உள்ள 82 மாவட்ட செயலாளர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக, பாஜக இடையே பேச்சுவார்த்தை முதற்கட்டமாக நிறைவடைந்த நிலையில் இத்தகைய பேச்சுவார்த்தை குறித்து இன்றைய தினம் மாவட்ட செயலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

எடப்பாடி பழனிசாமி மற்றும் பியூஷ் கோயல் ஆகிய இருவரும் சந்தித்தபோது பேசப்பட்ட கருத்துக்கள், பரிமாற்றங்கள் குறித்தும் இன்றைய தினம் எடுத்துரைக்க உள்ளார். சென்னை மற்றும் கோவை மாவட்டத்தில் அதிமுகவிற்கு சாதகமாக இருக்கக்கூடிய தொகுதிகள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் போட்டியிடக்கூடிய தொகுதிகளை பாஜக கேட்பதாகவும், அந்த தொகுதிகளில் பாஜகவை ஒதுக்கலாமா என்பது குறித்தான கருத்துக்களையும் இன்றைய தினம் அதிமுகவின் மாவட்ட செயலாளர்களிடம் கேட்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதே போல் அதிமுக வெற்றிவாய்ப்புகள் உள்ள தொகுதிகளை பாஜக ஒதுக்கீடு செய்வதில் இருக்கக்கூடிய சிக்கல்கள் குறித்தும் இன்றைய தினம் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாட உள்ளார். அதிமுக சார்பில் 1 வேட்புமனு விநியோகம் இன்றுடன் நிறைவடையும் நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்தும் ஆலோசிக்க வாய்ப்பு உள்ளது. கடந்த 2016மற்றும் 2021 சட்டமன்ற தேர்தல்களை ஒப்பிடும் போது 2026 சட்டமன்ற தேர்தலுக்கான விருப்பமனு வழங்கக்கூடிய பணி என்பது மந்தமாக இருந்ததாக கட்சி தலைமை ஏற்கனவே தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், அது குறித்தான காரணங்கள் என்ன என்பது குறித்தும் ஆலோசனை செய்யப்பட உள்ளது. பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாக கரூர், சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் பூத் கமிட்டி அமைப்பதற்கான பணிகள் மந்தமாக இருக்கக்கூடிய நிலையில் அந்த மாவட்டங்களில் எதனால் பூத் கமிட்டி அமைக்கக்கூடிய பணி தொய்வில் இருக்கிறது என்பது குறித்தும் விளக்கம் கேட்க உள்ளார். தேர்தலுக்கு சில மாதங்கள் இருப்பதன் காரணமாக தேர்தல் பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் எனவும் எந்தெந்த மாவட்டங்களில் அதிமுக பலவீனமாக இருக்கிறதோ அந்த மாவட்டங்களில் பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு உள்ளது.

Related Stories: