கூடுவாஞ்சேரி, ஜன 24: செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் வண்டலூர் மற்றும் மண்ணிவாக்கம் ஆகிய ஊராட்சிகளில் அதிமுகவை நிராகரிப்போம் என்ற தலைப்பில், திமுக சார்பில் கிராம மக்கள் சபை கூட்டம் நடந்தது. வடக்கு ஒன்றிய செயலாளர் ஆராமுதன் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எம்.கே.டி.கார்த்திக், மாவட்ட பிரதிநிதி எம்.டி.சண்முகம், முன்னாள் ஒன்றிய குழு துணை தலைவர் தேவேந்திரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ஏ.ஜெ.ஆறுமுகம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளைஞரணி துணை அமைப்பாளர் சத்யநாராயணன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக எம்பி செல்வம், எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன், தலைமை கழக பேச்சாளர் ஆரணி மாலா ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். அப்போது பொதுமக்கள், ஊராட்சி முழுவதும் பன்றி தொல்லை அதிகமாக இருக்கிறது.