செல்லங்குப்பத்தில் மாவட்ட அரசு மாதிரி பள்ளி

*தமிழக முதல்வர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி தொகுதி செல்லங்குப்பத்தில் மாவட்ட அரசு மாதிரி பள்ளி மற்றும் விடுதிகளை தமிழக முதல்வர் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
விக்கிரவாண்டி தொகுதி காணை ஒன்றியம், கெடார் அடுத்த செல்லங்குப்பம் ஊராட்சியில் ஒரே வளாகத்தில் ரூ.56.80 கோடி திட்ட மதிப்பீட்டில் மாவட்ட அரசு மாதிரி பள்ளி மற்றும் மாணவ, மாணவியர் விடுதிகள் கட்டப்பட்டுள்ளது. நேற்று காலை 10.30 மணியளவில் சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக இக்கட்டிடங்களை திறந்து வைத்தார்.

பின்னர் நடைபெற்ற விழாவில் தொகுதி எம்எல்ஏ அன்னியூர் சிவா, மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், தெற்கு மாவட்ட பொறுப்பாளர், முன்னாள் எம்.பி. கௌதமசிகாமணி ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, முதல்வருக்கு நன்றி தெரிவித்து பேசினர்.

இதில் டீ.ஆர்.ஓ. முருகேசன், தாசில்தார் மகாதேவன், டி.இ.ஓ. சேகர், தமிழ்நாடு மாதிரி பள்ளிகள் ஒருங்கிணைப்பாளர் நாராயணன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ராஜுவ், உதவி செயற்பொறியாளர் பாலாஜி, ஒன்றிய சேர்மன்கள் கலைச்செல்வி, சங்கீத அரசி ரவிதுரை, துணை சேர்மன் வீரராகவன், பேரூராட்சி சேர்மன் அப்துல் சலாம், துணை சேர்மன் பாலாஜி, ஒன்றிய செயலாளர்கள் கல்பட்டு ராஜா, முருகன், திட்டக்குழு தலைவர் முருகன், வேம்பி ரவி, ஜெயபால், கில்பர்ட் ராஜ், மும்மூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர் இந்திரா மணி, துணை தலைவர் ஆஞ்சலினா தாஸ் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில் வேலன் நன்றி கூறினார்.

Related Stories: