நாகர்கோவில், ஜன.19: நாகர்கோவில் இருளப்பபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (57). இவரது மகன் நிஷாந்த். இவருக்கும், மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்த முருகன் மகன் அபி என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளது. சம்பவத்தன்று மறவன்குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு திருமண நிகழ்ச்சியில் அபி மற்றும் அவரது நண்பர்கள் தகராறு செய்துள்ளனர். இந்த தகராறு குறித்து, போலீசில் தகவல் கூற போவதாக ராஜ்குமார் கூறினார். இதனால் அபி மற்றும் அவரது நண்பர்கள், ராஜ்குமார் மீது ஆத்திரம் அடைந்து தகராறு செய்தனர். அப்போது அங்கிருந்தவர்கள் அபி மற்றும் அவர்களது நண்பர்களை கண்டித்து அனுப்பினர்.