புதுக்கோட்டை: ஆலங்குடி கோவிலூரில் இன்று நடந்த ஜல்லிக்கட்டில் 720 காளைகள் சீறிப்பாய்ந்தன. காளைகளை அடக்க 320 வீரர்கள் மல்லுக்கட்டினர். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அடுத்த கோவிலூர் முத்து மாரியம்மன் கோயில் மாசி திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடந்தது.
இதற்காக புதுக்கோட்ைட, சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, மதுரை, கரூர், தஞ்சை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து காளைகள் அழைத்து வரப்பட்டது. காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். இறுதியாக 720 காளைகள், 320 மாடுபிடி வீரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
