அரியமான் கடற்கரையில் குளிக்க முடியாமல் சுற்றுலா பயணிகள் தவிப்பு

மண்டபம் : அரியமான் கடற்கரை பகுதியில் பலத்த சூறைக்காற்றுடன் கடல் அலை நேற்று கரையை மோதியதால், சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்க முடியாமல் நேற்று தவித்தனர்.

ராமநாதபுரம்-ராமேஸ்வரம் செல்லும் வழியில் உச்சிப்புளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைதூரத்தில வடகடலில் அரியமான் பீச் உள்ளது. இந்த பீச்சில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில மாவட்ட நிர்வாகம் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை மேம்படுத்தி வருகிறது.

இதனால் இந்த பீச்சுக்கு பொழுதுபோக்கிற்காக சுற்றுலா பயணிகள் தமிழக முழுவதும் இருந்து தினசரி வந்து கொண்டே இருப்பார்கள். இவர்கள் கடலில் நீராடி விளையாடி கொண்டு பொழுதைப் போக்குவார்கள்.

இந்த நிலையில் நேற்று காலையில் இந்த கடல் பகுதியில் பலத்த சூறைக்காற்றுடன் கடல் அலை வீசி கரையை மோதிக்கொண்டிருந்தது. இதனால் அரியமான் பீச்சுக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் அச்சத்துடன் கரையில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டு தவித்தனர்.

Related Stories: