இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதி

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கடந்த ஆகஸ்ட் மாதம் வீட்டில் கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது. தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் கடந்த செப்டம்பர் மாதம் வீடு திரும்பினார்.

இதையடுத்து, உடல்நலக்குறைவு காரணமாக அக்டோபர் மாதம் நல்லகண்ணு மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், சிகிச்சைக்குப்பின் அவர் வீடு திருப்பினார். இந்த நிலையில் நல்லகண்ணுவுக்கு மீண்டும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதன் காரணமாக நேற்று அதிகாலை 5.30மணிக்கு சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சுவாசக்குழாயில் பாதிப்பு ஏற்பட்டதை கண்டறிந்து அதற்கான சிகிச்சையை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து அவர் மருத்துவ கண் காணிப்பில் உள்ளார்.

Related Stories: