பேரத்தூர் ஊராட்சியில் மக்கள் கிராம சபை கூட்டம்

திருவள்ளூர்: வடக்கு ஒன்றிய செயலாளர் புஜ்ஜி ராமகிருஷ்ணன் தலைமையில் பேரத்தூர் ஊராட்சி திமுக சார்பில் ஒன்றிய கவுன்சிலர் டி.சாந்தி தரணி, ஊராட்சி மன்ற தலைவர் டி.முத்துமாரி தேவன், துணைத் தலைவர் மோகன் ராவ் ஆகியோர் ஏற்பாட்டில் அதிமுகவை நிராகரிக்கிறோம் மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.   பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி பொதுமக்களிடம் குறைகளை கேட்டு சிறப்புரையாற்றினார். அப்போது பொதுமக்கள்  இலவச வீட்டு மனை பட்டா கேட்டும் அடிப்படை வசதிகள் நிறைவேற்றி தருமாறும், 100 நாள் வேலை திட்டம்  நிறுத்தப்பட்டுள்ளது குறித்தும், முதியோர்களுக்கு ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளது குறித்தும் அதிமுக ஆட்சியின் மீது சரமாரியாக குற்றம் சாட்டி பேசினர். இதில் ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் எம்.பக்கத்துல்லா கான், நிர்வாகிகள் பிகேஇ.கபிலன், குமார், மணிகண்டன், ராஜி, சஞ்சய், எல்.ராமநாதன், கோபால், எம்டிசி.மூர்த்தி, ஜெ.பாபு, கே.மூர்த்தி, சி.பாஸ்கர், டி.நாகரத்தினம், ஜி.சுதாகரன் ராமுலு, ஜி.பிரபாகர்,  உதயநிதி தரணி கோகுலகிருஷ்ணன், சிற்றம் ரவி, எஸ்.விக்கி, காளிதாஸ், விமல், ஜெ.தயாளன், துரைபாபு, வெங்கட்ராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: