சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 5% கூடுதலாக பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவிக்கப்பட்டது. பருவமழை காலத்தில் இயல்பாக 399.9 மி.மீ. மழை பொழியும் நிலையில், தற்போது வரை 419.3 மி.மீ. மழை பெய்துள்ளது. சென்னை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது வரை இயல்பைவிட 3% குறைவாக பெய்துள்ளது.
