கஞ்சா விற்பனை 2 பேர் கைது

தேனி, ஜன. 17: தேனி அருகே வீரபாண்டி கல்லுக்குழி அருகே கஞ்சா விற்பதாக அவ்வூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து வீரபாண்டி போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் சுந்தரலிங்கம் தலைமையிலான போலீசார் அப்பகுதிக்கு சென்று கண்காணித்தனர். அப்போது வீரபாண்டி அரசு உயர்நிலைப்பள்ளி தெருவைச் சேர்ந்த செல்லக் காமு, சுபாஷ், கிழக்குத் தெருவைச் சேர்ந்த முத்து காமேஸ்வரன், முத்துப்பாண்டி ஆகியோர் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்தனர். போலீசார் பிடிக்க முயன்றபோது செல்லக்காமு மற்றும் சுபாஷ் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர். முத்துக்காகாமேஸ்வரன், முத்துப்பாண்டி பிடிபட்டனர். இவர்களிடமிருந்து அரை கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து பிடிபட்ட 2 பேரை கைது செய்தனர். மற்ற இருவரையும் தேடி வருகின்றனர்.

Related Stories: