எடப்பாடி பழனிசாமியின் பயத்தை மறைக்க போடப்பட்ட மேக்அப்தான் பொதுக்குழு: ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்

சென்னை: எடப்பாடி பழனிசாமியின் பயத்தை மறைக்க போடப்பட்ட மேக்அப்தான் பொதுக்குழு என ஆர்.எஸ்.பாரதி விமர்சனம் செய்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலிலும் எடப்பாடி பழனிசாமிக்கு தோல்வியையே மக்கள் பரிசாக தருவார்கள். நெல் ஈரப்பத அளவை உயர்த்த வேண்டும் என்று பாஜக அரசுக்கு கோரிக்கை வைக்கக் கூட எடப்பாடிக்கு துணிவில்லை. எடப்பாடி பழனிசாமியின் புலம்பலை தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பார்கள். அதிமுக பொதுக்குழுவில் ‘அதிகாரம்’ என்ற போலி சட்டையை பழனிசாமிக்கு மாட்டியிருக்கிறார்கள் என்றும் விமர்சித்தார்.

Related Stories: