ஈரோடு, ஜன. 11: ஈரோடு கலைஞர் கருணாநிதி நகர் தெற்கு முதல் வீதியை சேர்ந்தவர் ஞானசேகரன் (61). இவர், திருச்சி பெல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி புனிதவதி (57). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். மகள் சென்னையில் தங்கி அங்குள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் அதிகாரியாகவும், மகன் கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். புனிதவதி கடந்த 10 ஆண்டுகளாக சரவாங்கி (முடக்குவாத) நோயால் பாதிக்கப்பட்டு, வீட்டிலேயே மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டு வந்தார். ஞானசேகரனும், புனிதவதியும் மட்டும் தனியாக வசித்து வந்தனர். ஞானசேகரன் கடந்த 7ம் தேதி பழனியில் உள்ள அவரது சகோதரர் வீட்டிற்கு சென்று விட்டு, நேற்று காலை அவரது வீட்டுக்கு வந்தார்.