பவானியில் லாரி மோதி முதியவர் சாவு

பவானி,ஜன.11:கரூர் மாவட்டம், அரசு காலனியைச் சேர்ந்தவர் பேச்சிமுத்து  (65). விவசாயக் கூலித் தொழிலாளி. இவர், பவானி செங்காட்டில் உள்ள உறவினர்  வீட்டுக்கு கடந்த 7ம் தேதி வந்துள்ளார். காவிரி ஆற்றில் குளிப்பதற்கு  நேற்று முன்தினம் மாலை சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்குத் திரும்பிச்  சென்றார். பவானி - மேட்டூர் ரோட்டில் தீயணைப்பு நிலையம் அருகே ரோட்டைக்  கடந்து சென்றபோது, மேட்டூர் பகுதியிலிருந்து வந்த லாரி பேச்சிமுத்துவின்  மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்தவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு  பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு, மருத்துவர்கள் பரிசோதனையில்  பேச்சிமுத்து உயிரிழந்தது தெரியவந்தது. இது குறித்து, பவானி போலீசார்  வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: