பெரியகுளம், டிச. 11: பெரியகுளத்தில் சி.எஸ்.ஐ., ஆர்.சி, டி.இ.எல்.சி ஆகிய கிறிஸ்தவ திருச்சபைகள் மற்றும் தேனி வைகை ஸ்கேன் சார்பில், வடகரை சி.எஸ்.ஐ சர்ச்சில் பொது மருத்துவ முகாம் நடந்தது. டாக்டர் பாண்டிராஜன் தலைமையில் மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்தனர். முகாமுக்கு தென் இந்திய திருச்சபை தலைவர் ஸ்டாலின் பிரபாகர் தலைமை வகித்தார். டி.இ.எல்.சி. சர்ச் பாதர் தாமஸ் முன்னிலை வகித்தார். கத்தோலிக்க திருச்சபை பங்குத்தந்தை பாப்புராஜ் முகாமை துவக்கி வைத்தார்.