வாலாஜாபாத், ஜன. 11: புதிய வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டில்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அனைத்து கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. வாலாஜாபாத் அடுத்த தென்னேரி கிராமத்தில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகாமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிராக கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி டில்லியில், விவசாயிகள் போராடி வரும் நிலையில். அவர்களுக்கு, ஆதரவு தெரிவித்து அனைத்து கட்சிகள் சார்பில் நேற்றுமுன்தினம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் லாரன்ஸ் தலைமை தாங்கி இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினார். ஆர்ப்பாட்டத்தின்போது, விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும், இந்த வேளாண் சட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து கட்சி பிரமுகர்களும் விளக்கிப் பேசினர்.