110 பேர் கைது திருவாரூர் கலெக்டர் அலுவலகம் முன் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

திருவாரூர், ஜன.7: பணி நிரந்தரம் செய்யக்கோரி திருவாரூரில் நேற்று எம்ஆர்பி செவிலியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 2015ம் ஆண்டில் பணி நியமனம் செய்யப்பட்ட 13 ஆயிரம் செவிலியர்களில் 2 ஆயிரம் பேர் மட்டுமே பணி நியமனம் செய்யப்பட்டு காலமுறை ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 6 ஆண்டுகளாக பணி நிரந்தரம் செய்யப்படாமல் இருந்து வரும் 11 ஆயிரம் செவிலியர்களையும் பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் மற்றும் மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர் சங்கத்தினர் மாவட்டத் தலைவர் சிவபிரசாத் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: