சீர்காழி நகராட்சி பகுதியில் பாலித்தீன் பைகள் பறிமுதல்

சீர்காழி, ஜன.7: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சி பகுதியில் தடைசெய்யப்பட்ட பாலித்தீன் பைகளை நகராட்சி ஊழியர்கள் பறிமுதல் செய்தனர். சீர்காழி நகராட்சி ஆணையா் தமிழ்ச்செல்வி, மேலாளா் காதா்கான் மற்றும் நகராட்சி ஊழியா–்கள் காவல்துறையினா் உதவியுடன் சீா்காழி பிடாரி வடக்கு வீதி, கடைவீதி, பிடாரி தெற்குவீதி ஆகிய பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், பழக்கடைகள் மளிகை கடைகளில் சோதனை நடத்தினர். அப்போது தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட, 25 கிலோ எடை கொண்ட பாலித்தீன் பைகளை பறிமுதல் செய்து கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர். மீண்டும் பாலித்தீன் பைகளை விற்பனை செய்தாலும், பயன்படுத்தினாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடை உரிமையாளர்களை எச்சரித்தனர். இதனை தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் எரித்து அப்புறப்படுத்தப்பட்டன.

Related Stories: