கும்பகோணம், ஜன.5: கும்பகோணத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மாநில குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில செயலாளர் ஜான்சிராணி கலந்துகொண்டு நிருபர்களிடம் கூறியதாவது: தெலங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூபாய் 3,000 வழங்கப்படுவது போல் தமிழகத்திலும் குறைந்தபட்சம் மாதம் 3,000 ரூபாயும், கடும் ஊனமுற்றோர் மாற்றுத்திறனாளிக்கு ரூபாய் 5,000 தமிழக அரசு உயர்த்தி வழங்கிட வேண்டும். தனியார்துறை பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு குறைந்தபட்சம் 5 சதவீத இடங்களை உத்தரவாதப்படுத்த ஊனமுற்றோர் உரிமைகள் சட்டம் 2016 வலியுறுத்துகிறது. எனவே தனியார் துறையில் பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு குறைந்தபட்சம் 5 சதவீத வேலைவாய்ப்பு உத்தரவாதப்படுத்திட விதி உள்ளது சட்டம் அமலுக்கு வந்தது. 4 ஆண்டுகள் நிறைவடைந்த பின்னரும் மத்திய, மாநில அரசுகள் இந்த சட்ட விதியை அமல்படுத்த மறுக்கின்றன.