கஞ்சா விற்றவர் கைது

திருவையாறு, ஜன.5: திருவையாறு அடுத்த திருப்பழனம் காமராஜ்நகரை சேர்ந்து கேசவன் மகன் யோகேஸ்வரன்(22). இவர் செண்பகபேட்டை தெரு முக்கத்தில் கஞ்சா விற்றுக்கொண்டிருப்பதாக வந்த தகவலின்பேரில் திருவையாறு சப்இன்ஸ்பெக்டர் ஞானமுருகன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று யோகேஸ்வரனை பிடித்து 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து யோகேஸ்வரனை கைது செய்தனர்.

Related Stories: