நாகை, ஜன.5: ஓய்வுபெற்ற கப்பல் மாலுமிகளுக்கு முதியோர் உதவித்தொகை வழங்ககோரி நாகை தபால்நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஓய்வு பெற்ற வணிகக் கப்பல் மாலுமிகள் நல சங்கம் சார்பில் நாகை தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில செயலாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். ஓய்வுபெற்ற மாலுமிகளுக்கு முதியோர் உதவித்தொகை வழங்க வேண்டும். இந்தியாவின் மூத்த குடிமக்கள் என்பதை உணர்த்தும் வகையில், மருத்துவ பண பலன்களை வழங்க வேண்டும். மாலுமிகளின் பொது நல நிதி நிறுவனம் ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மருத்துவ பணப்பலன்களை இறந்த மாலுமிகளின், மனைவிகளுக்கும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.