செல்போன் டவர் அமைப்பதை தடுக்கக்கோரி மனு

தேனி, ஜன. 5: ஆண்டிபட்டி சக்கம்பட்டி பகுதியில் தனியார் செல்போன் டவர் அமைப்பதை தடுக்க வலியுறுத்தி கிராம மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர் ஆண்டிபட்டி அருகே, சக்கம்பட்டியில் உள்ள தெற்கு தெருவைச் சேர்ந்த மக்கள் தேனி கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: ஊரில் தெற்கு தெருவில் தனியார் இடத்தில் தனியார் நிறுவனம் செல்போன் டவர் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. செல்போன் டவர் அமைத்தால் பெரும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, செல்போன் டவர் அமைப்பதை தடுக்க வேண்டும்’ என மனுவில் தெரிவித்து இருந்தனர்.

Related Stories: