பல்லாவரம்: பல்லாவரம் அருகே தந்தை திட்டயதால் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர், விசுவாசபுரம் பாத்திமா நகரை சேர்ந்தவர் இக்னியஸ்சுந்தர். இவரது மனைவி முத்துலெட்சுமி .இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். இவர்களது மகன் சேவியர்பிரகாஷ் அஜய் (18). இவர், தந்தையுடன் வசித்து வந்தார். அஜய், ஐடிஐ முதலாமாண்டு படித்து வந்தார். கல்லூரி திறக்காததால் அதே பகுதியில் சென்ட்ரிங் வேலையும் செய்து வந்தார். சமீப காலமாக அஜய், தனது தாயிடம் போனில் பேசி வந்தார்.