சாயல்குடி, ஜன.4: கடலாடி பகுதியில் வேகமாக பரவி வரும் மர்ம காய்ச்சலால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கிராமங்களில் சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். சாயல்குடி அருகே கன்னிராஜபுரம், நரிப்பையூர் முதல் வாலிநோக்கம் வரையிலான 10க்கும் மேற்பட்ட கடற்கரை கிராமங்கள் மற்றும் கடலாடி பகுதியிலுள்ள சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருவதாக கூறுகின்றனர். கை, கால் மூட்டு வலி, உடல் வலி, தலை சுற்றல், சளி, வாந்தியுடன் கூடிய காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
இதனால் அரசு மருத்துவமனைகள் மட்டுமில்லாது தனியார் மருத்துவமனைகளிலும் நோயாளிகளில் கூட்டம் அதிகரித்து வருகிறது.