நள்ளிரவில் புத்தாண்டு சிறப்பு திருப்பலி திருவெறும்பூர் பகுதியில் தொடர் திருட்டு, வழிப்பறி 9 பேர் கைது: 40 பவுன் நகைகள் பறிமுதல்

திருவெறும்பூர், ஜன.1: திருவெறும்பூர் பகுதியில் கடந்த ஒன்றரை ஆண்டாக பல்வேறு திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட 9 பேரை பெல் போலீசார் கைது செய்ததோடு அவர்களிடமிருந்து 40 பவுன் நகையை பறிமுதல் செய்துள்ளனர். திருவெறும்பூர் அருகே உள்ள பெல் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ஹரிபாஸ்கர் இவரது வீட்டில் கடந்த 2 மாதத்திற்கு முன்பு வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் தென்னூரை சேர்ந்த அமீர்(22), சந்தோஷ்(21), பூனை நாகராஜ்(47), ஆரோக்கியதாஸ்(23), மணி(21), வேலு(22), வினோத்(19), ரவி(50), கவுதம்(21) ஆகிய 9 பேரை தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை செய்தபோது அவர்கள் ஹரிபாஸ்கர் வீட்டில் திருடியதை ஒப்புக்கொண்டனர். மேலும் துவாக்குடி, நவல்பட்டு பகுதிகளில் வழிப்பறி மற்றும் திருட்டில் ஈடுபட்டதை ஒத்துக்கொண்டனர். இதையடுத்து அவர்களிடமிருந்து 40 பவுன் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் குறித்து பெல் போலீசார் வழக்குப்பதிந்து அவர்களை கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories: