புதுக்கோட்டை, ஜன.1: புதுக்கோட்டை அதிகாலை முதலே சூரியன் முகமே தெரியாத வகையில் வானத்தில் கருமேகக் கூட்டங்கள் நேற்று காணப்பட்டன. இதனால், குளிர்ந்த நிலையே நீடித்தது. மேலும் அவ்வப்போது சாரல் மழையும் சற்று கனமழையும் மதியம் வரை பெய்தது. நகர் பகுதிகளில் மழையின் காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. நடந்து சென்ற பாதசாரிகள் குடை பிடித்தப்படியும், மழை கோட் அணிந்தும் சென்றதை அதிக அளவில் காணமுடிந்தது.