சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ரூ.1.19 கோடி உண்டியல் காணிக்கை

மண்ணச்சநல்லூர், டிச.31: சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல்கள் மாதமிருமுறை எண்ணப்படுகின்றன. கோயில் இணை ஆணையர் அசோக்குமார் தலைமையில் மொத்தம் 34 உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன.  உண்டியலில் ரொக்கமாக ஒரு கோடியே 19 லட்சத்து 74 ஆயிரத்து 482 ரூபாய், ஒரு கிலோ 866 கிராம் தங்க நகைகள். 5 கிலோ 222 கிராம் வெள்ளி நகைகள், வெளிநாட்டு கரன்சிகள் 28 இருந்தன. இவை அனைத்தும் கோயில் கணக்கில் வரவு வைக்கப்பட்டன.

Related Stories: