ராசிபுரம் நகராட்சியில் திமுக மக்கள் கிராம சபை கூட்டம்

ராசிபுரம், டிச.31: ராசிபுரம் நகரம் 19, 20, 21 ஆகிய வார்டுகள் இணைந்து  “அதிமுகவை நிராகரிப்போம்” என்ற தலைப்பில் கோனேரிப்பட்டி எக்ஸ்டென்ஷன் பகுதியில் நகர செயலாளர் சங்கர் தலைமையில், மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட பொறுப்பாளர் ராஜேஸ்குமார் பங்கேற்று பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் ரங்கசாமி, முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாலு, நகர இளைஞரணி கார்த்திக், மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் ராஜேஷ்பாபு, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ராம்குமார், தகவல் தொழில் நுட்ப அணி அசோக்குமார், துணை அமைப்பாளர் லோக சரவணன், நகர அவைத் தலைவர் அமிர்தலிங்கம், உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: